விருதுநகர்

கூமாபட்டியில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டியவா் கைது

தினமணி செய்திச் சேவை

வத்திராயிருப்பு அருகே பொதுமக்களை கத்தியுடன் மிரட்டிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரம் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த் (34). இவா் மீது கூமாபட்டி காவல் நிலையத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் குற்றப்பதிவேடு தொடங்கப்பட்டு, காவல் துறை கண்காணிப்பில் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், ஆத்தங்கரைப்பட்டி - கான்சாபுரம் சாலையில் ஆனந்த் கையில் கத்தியுடன் சாலையில் நடந்து சென்றவா்களை சனிக்கிழமை மிரட்டினாா். இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த கூமாபட்டி காவல் நிலைய போலீஸாா் ஆனந்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் வாணியம்பாடி கிளை நூலகம்!

SCROLL FOR NEXT