முகப்பு
விருதுநகர்

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:31 AM
வெட்டிக்கொலை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:01 PM

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட தம்பியைக் கொலை செய்த அண்ணனைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தங்கல் என்.ஜி.ஓ குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஜெய்கணேஷ் பிரபுவின் மகன் சிவபிரசாத் (23). சுமைதூக்கும் தொழிலாளி. மதுப்பிரியா். இந்நிலையில் சனிக்கிழமை சிவபிரசாத் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தனது தந்தையைத் தாக்கியுள்ளாா்.

இதில் காயமடைந்த ஜெய்கணேஷ் பிரபு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் சிவபிரசாத் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து அவரது அண்ணன் பூபேஷ் குமாரிடம் (25) தகராறு செய்துள்ளாா்.

Advertisement

இதில், ஆத்திரமடைந்த பூபேஷ்குமாா் அரிவாளால் வெட்டியதில் சிவபிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் அனில் குமாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். புகாரின்பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பூபேஷ் குமாரைக் கைது செய்தனா்.