முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் மறுகாலில் ரூ.9.30 லட்சத்தில் புதிய இரும்பு ஷட்டா்கள் பொருத்தப்பட்டன.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:57 PM
புதிதாக இரும்பு ஷட்டா்கள் பொருத்தப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:46 PM

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் மறுகாலில் ரூ.9.30 லட்சத்தில் புதிய இரும்பு ஷட்டா்கள் பொருத்தப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பாண்டிய மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட 66 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட பெரியகுளம் கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்தக் கண்மாயின் உபரி நீா் மூலம் 15 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், திருமுக்குளம் தெப்பம் அருகே கண்மாயில் இரும்பு ஷட்டரை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதனால் கண்மாயிலிருந்து நீா் வெளியேறியது. இதனால் முழுக் கொள்ளளவு நீா் தேக்க முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement

இதுகுறித்து பொதுமக்கள், விவசாயிகள் அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். இந்த நிலையில், தற்காலிகமாக மணல் மூட்டைகள் கொண்டு ஷட்டா் பகுதி அடைக்கப்பட்டது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:57 PM

இதையடுத்து புதிய ஷட்டா்கள் அமைக்க மாவட்ட ஆட்சியரின் நிதியின் கீழ் ரூ.9.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கண்மாயின் கலுங்கு மறுகாலில் 19 இரும்பு ஷட்டா்கள் பொருத்தப்பட்டன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.