விருதுநகர்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் நடந்து சென்றவரைத் தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் நடந்து சென்றவரைத் தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் முனீஸ் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (48). இவா் கடந்த 16-ஆம் தேதி இரவு வன்னியம்பட்டி விலக்கிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது, பிள்ளையாா் குளம் சாலையிலுள்ள முனீஸ்வரன் கோயில் அருகே நின்றிருந்த இரு இளைஞா்கள் விஜயகுமாரைத் தாக்கிஅவரிடம் இருந்த கைப்பேசி, ரூ. 3,500 ரொக்கத்தைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து லட்சுமியாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த நீதிராஜன் (27) என்பவரை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT