தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!
தனிநபர் கடன் என்ற பெயரில் நடக்கும் மோசடி பற்றி...
வங்கி ஊழியர் போல நடித்து 'பர்சனல் லோன்' எனும் தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி கும்பல், பணத்தைத் திருடும் வேலைகளில் ஈடுபடுகிறது.
பொதுவாக பணப்பரிமாற்றத்தைப் பொருத்து வங்கிகள் தானாகவே தனிநபர் கடன்களை வழங்குவதாகக் கூறுகின்றன. அதிலும் ஏற்கெனவே கடன் வாங்கி சரியாக தவணை செலுத்துபவர்கள், வங்கிக்கணக்கில் அதிக தொகை வைத்திருப்பவர்கள், கிரெடிட் கார்டு பெற்றவர்களுக்கு இதுதொடர்பாக போன் அழைப்புகள் அதிகம் வருவதுண்டு.
இந்நிலையில் மோசடி கும்பல் இந்த சூழலைப் பயன்படுத்தி மக்களிடம் மோசடியில் ஈடுபடுகின்றன.
Advertisement
Advertisement
வங்கியில் இருந்து அல்லது நிதி நிறுவனங்களில் இருந்து பேசுவதாகக் கூறும் மோசடி கும்பல், 'நீங்கள் தனிநபர் கடனுக்கு தகுதியானவராக இருக்கிறீர்கள், குறைந்த வட்டியில் கடன் பெறலாம்' என்று ஆசை வார்த்தை கூறி அந்த கடனைப் பெறுவதற்கு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியைக் கேட்கின்றனர்.
மக்களும் அதை நம்பி ஓடிபியைக் கூறும்பட்சத்தில் அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடுகிறார்கள்.
அதாவது ஓடிபி கூறியவுடன் அவர்களது மொபைல், மோசடி கும்பலின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விடுகிறது.
இதுமட்டுமின்றி எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பி அதில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்யச் சொல்வது, இ-மெயில் மூலமாக லிங்க்குகளை அனுப்புவது என மோசடிகள் நடைபெறுகின்றன.
பாதுகாப்பு வழிகள்
நீங்கள் தனிநபர் கடன் பெற விரும்பினால் வங்கிகளை நேரடியாக ஒருமுறை தொடர்புகொண்டு பெறுவது நல்லது.
தனிநபர் கடனுக்கு எந்த வங்கிகளும் உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்காது. எனவே அதுபோன்று யாரேனும் கட்டணம் கோரினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தெரியாத, சந்தேக எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். குறிப்பாக ஓடிபியை தெரிவிக்க வேண்டாம். அவர்கள் அனுப்பும் லிங்க்குகளை திறக்க வேண்டாம்.
நிதி நிறுவனமாக இருந்தால் அதுபற்றிய விவரங்களை ஒருமுறை சரிபார்த்து பின்னர் கடன் பெறுவது நல்லது.
கடன் தொடர்பான பத்திரங்களை நன்றாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
Beware of Personal Loan scams
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.