முகப்பு
இணையம் ஸ்பெஷல்

ஹிரோஷிமாவில் அணுகுண்டு ஏற்படுத்திய மனித நிழல்கள்! அணுகுண்டுகளுக்கும் செல்லப்பெயர்?

ஹிரோஷிமா மீது விழுந்த அணுகுண்டு மனித நிழல்கள் ஏற்படுத்தியது பற்றியும் அணுகுண்டுகளுக்கும் செல்லப்பெயர் வைத்தது பற்றியும்.

Updated On : 27 மார்ச், 2026 at 11:27 AM
பிரதி படம் - File photo
பகிர்:

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டபோது, அங்கிருந்த மனிதர்கள் மற்ற பொருள்களின் நிழல்கள் தரையில் ஒட்டிக்கொண்டன. 85 ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் அந்த நினைவுகளோடு நிழல்களும் மறையாமல் காட்சியளிக்கிறது.

உலகையே உலுக்கிய ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் புகைப்படங்களைப் பார்த்த எவர் ஒருவருக்கும், அங்கு தரையிலும் சுவரிலும் மனிதர்களின், சைக்கிள் மற்றும் பிற பொருள்களின் நிழல்களும் அப்படியே ஒட்டியிருப்பதைப் பார்க்கும்போது ஒரு சொல்ல முடியாத கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஜப்பானின் மிகப்பெரிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. அப்போது அதன் நேரடி பாதிப்புக்கு உள்ளாகாத, ஆனால், வெப்பத்தை உணர்ந்த நகரங்களில், மனிதர்களின் நிழல்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன.

காரணம் பற்றி அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டதில் கிடைத்த பதில், ஒவ்வொரு அணுக் குண்டும் வீசப்பட்டபோது, அதிலிருந்து பயங்கர வெளிச்சம் மற்றும் வெப்பம் அப்பகுதி முழுக்க பரவியிருக்கும். ஆனால், ஒரு பொருளோ, மனிதர்களோ அதன் பாதையை தடுக்கும்போது, அவர்கள் மீதே வெளிச்சமும் வெப்பமும் சென்றிருக்கும். ஆனால், தடையில்லாத இடங்கள் வழியாகச் சென்ற வெளிச்சம் - வெப்பம் தரை அல்லது சுவர் பகுதியை வெண்மையாக்கியிருக்கும். ஆனால், ஒரு மனிதரால் மறைக்கப்பட்டு வெளிச்சம் - வெப்பம் படாத இடம், அவரது நிழல் விழுந்து கிடந்த இடம் அப்படியே அதே நிறத்தில் இருந்திருக்கும். அருகில் இருக்கும் இடங்கள் வழக்கத்தை விட வெண்மையாக மாறியதால், நிழல் விழுந்த இடம் மட்டும் சற்று கருப்பாக மாறியதால், அந்த நிழல் பகுதி நிரந்தரமாக நின்றுவிட்டது.

இந்த அணுகுண்டின் நேரடி வீச்சினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சாம்பலாகிப் போன நிலையில், தொலைவில் வெப்பமும் வெளிச்சமும் பட்ட இடங்களில்தான் இந்த நிழல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டில் யுரேனியம் 235 மற்றும் ப்ளுட்டோனியம் 239 பயன்படுத்தப்பட்டு, அதிலிருந்து கடுமையான வெப்பமும், குறைந்த வெப்ப அலைகளான கம்மா ரேடியேஷனாக நகரம் முழுவதும் பரவியிருக்கிறது.

செல்லப்பெயர் வேறு?

ஹிரோஷிமா மீது ஆகஸ்ட் 6ஆம் தேதி வீசப்பட்ட அணுகுண்டின் செல்லப் பெயர் லிட்டில் பாய், நாகசாகி மீது 9ஆம் தேதி வீசப்பட்ட அணுகுண்டின் செல்லப் பெயர் ஃபேட் மேன் என்று தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.

summary

About the human shadows cast by the atomic bomb dropped on Hiroshima and the nicknames given to atomic bombs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.