தெரிந்து கொள்ளுவோம்
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் குறிப்பிட்ட அளவு தங்கத்தை சட்டப்பூர்வமாகக் கொண்டு வரலாம்.
* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் குறிப்பிட்ட அளவு தங்கத்தை சட்டப்பூர்வமாகக் கொண்டு வரலாம். சாதாரண மக்கள் என்றால் தங்கள் சொந்த உபயோகத்துக்காக ஆணாக இருந்தால் 60 கிராமும், பெண்ணாக இருந்தால் 100 கிராம் தங்கமும் கொண்டு வரலாம். இதற்கு அதிகமாகக் கொண்டு வந்தால், கூடுதல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்படும்.
* அந்த பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் அதற்கு உரிய அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு வெளியே வந்து விடலாம்.
* ஒருவேளை ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அந்தப் பயணி கைது செய்யப்படுவார். ஆனால் ஜாமீனில் வெளியில் வரலாம்.
Advertisement
* அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால் சம்பந்தப்பட்ட பயணி ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின்கீழ் கைது செய்யப்படுவார்.