முகப்பு
தமிழ்நாடு

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்

சட்டவிரோத ஆற்று மணல் வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:46 PM
எம்.ஆர். விஜயபாஸ்கர்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:32 PM

சட்டவிரோத ஆற்று மணல் வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.

சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கில் முன்ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் மார்ச் 31ஆம் தேதி சரணடைய உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து சரணடைவதற்கான அவகாசத்தை நீட்டிக்கக்கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய ஏப்.28ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது.

Advertisement

மேலும் ஏப்.29, 30 மற்றும மே 1ஆம் தே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

summary

The High Court has granted time to former minister M.R. Vijayabaskar to surrender in the illegal river sand case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.