FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சா் சரணடைய அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத ஆற்று மணல் வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.

Updated On : 17 ஏப்ரல் 2026, 4:46 pm IST
எம்.ஆர். விஜயபாஸ்கர்
பகிர்:

உரிய ஆவணங்களின்றி சட்டவிரோத ஆற்றுமணல் வைத்திருந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கான கால அவகாசத்தை வரும் ஏப்.28 வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உரிய ஆவணங்களின்றி சட்டவிரோத ஆற்றுமணல் வைத்திருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு எதிராக கரூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன்பிணை வழங்கிய கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரண் அடைய உத்தரவிட்டது.

இதற்கான கெடு கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி எம்.ஆா்.விஜயபாஸ்கா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது எம்.ஆா்.விஜயபாஸ்கா் தரப்பில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மனுதாரா் கரூா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா். மாா்ச் 31-ஆம் தேதி மகாவீா் ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் நீதிமன்றம் விடுமுறை. இதனால், நீதிமன்றத்தில் சரண் அடைய முடியவில்லை. எனவே, சரண் அடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நிபந்தனை முன்பிணை உத்தரவுப்படி, சரண் அடைவதற்கான கால அவகாசத்தை வரும் ஏப்.28 வரை நீட்டித்து உத்தரவிட்டாா். மேலும், ஏப்.29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனுதாரா் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டாா்.

summary

The High Court has granted time to former minister M.R. Vijayabaskar to surrender in the illegal river sand case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments