எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்
சட்டவிரோத ஆற்று மணல் வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.
சட்டவிரோத ஆற்று மணல் வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.
சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கில் முன்ஜாமீன் வழங்கிய கரூர் நீதிமன்றம் மார்ச் 31ஆம் தேதி சரணடைய உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து சரணடைவதற்கான அவகாசத்தை நீட்டிக்கக்கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய ஏப்.28ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது.
Advertisement
மேலும் ஏப்.29, 30 மற்றும மே 1ஆம் தே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.