ராஜரத்தினமும் காருக்குறிச்சியும்!
அண்ணா சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் நின்றார். அனல் பறக்கும் பிரச்சாரம்.
அண்ணா சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் நின்றார். அனல் பறக்கும் பிரச்சாரம்.
மூதறிஞர் இராஜாஜி தலைமையில் ஒரு பொதுக் கூட்டம். சர். ஏ. இராமசாமி முதலியார் ஆங்கிலத்தில் பேச அண்ணா அதைத் தமிழில் மொழி பெயர்க்கிறார்.
கூட்டத் தலைமையேற்ற இராஜாஜி கடைசியில் பேசுகிறார். ""இது நியாயம் இல்லை. இப்படியா செய்வது?'' ஒரு பக்கம் திருவாவடுதுறை நாதசுரக் கச்சேரியும் மறுபுறம் காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதசுரக் கச்சேரியும் வைத்தால் எதை முழுமையாக ரசிக்க முடியும்? நான் மாட்டிக் கொண்டு விழிக்கிறேன்.
Advertisement
இராமசாமி முதலியாரின் ஆங்கில அழகையா? அண்ணாவின் தமிழ் இனிமையையா? எதை நான் ரசிக்க? திண்டாடிப் போய்விட்டேன். இவர்கள் எப்படித்தான் இப்படிப் பேசக் கற்றார்களோ?''
பாராட்டுவதைக் கூடக் கலையழகோடு பாராட்டிய ராஜாஜியின் அழகுப் பேச்சையும் கேட்ட மக்கள் மூன்று கச்சேரி கேட்ட நிறைவோடு சென்றனர்.
"சொன்னார்கள்... சொன்னார்கள்'' என்ற நூலிலிருந்து.