என்.எல்.சி இந்தியா 4வது காலாண்டு லாபம் ரூ. 1,393 கோடியாக உயர்வு!
என்.எல்.சி இந்தியா லிமிடெட், மார்ச் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஏறக்குறைய மூன்று மடங்காக உயர்ந்து ரூ. 1,393.46 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
புதுதில்லி: என்.எல்.சி இந்தியா லிமிடெட், மார்ச் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஏறக்குறைய மூன்று மடங்காக உயர்ந்து ரூ. 1,393.46 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ. 481.96 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்தது.
நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 3,971.90 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 5,197.22 கோடியாக இருப்பதாக என்.எல்.சி இந்தியா தெரிவித்துள்ளது.
Advertisement
நிறுவனத்தின் மொத்தச் செலவு, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 3,880.46 கோடியிலிருந்து அதிகரித்து ரூ. 4,327.14 கோடியாக உயர்ந்துள்ளது.
2025-26 நிதியாண்டிற்கான 2.50 சதவீத இறுதி ஈவுத்தொகையை, இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை மற்றும் வரவிருக்கும் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.