அச்சம் என்பது மடமையடா...!
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் தனக்கு சோர்வு ஏற்படும்போதெல்லாம் எம்.எஸ்.வி. இசையமைத்த, 'அச்சம் என்பது மடமையடா..' என்ற பாடலைக் கேட்பார்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:42 AM
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் தனக்கு சோர்வு ஏற்படும்போதெல்லாம் எம்.எஸ்.வி. இசையமைத்த, 'அச்சம் என்பது மடமையடா..' என்ற பாடலைக் கேட்பார். ஒருமுறை இந்தப் பாடல் குறித்து எம்.எஸ்.வி.யிடம் எம்ஜிஆர், 'இவ்வளவு துடிப்புமிக்க மந்திரச் சக்தி கொண்ட மெட்டை எங்கே கண்டுபிடித்தீர்கள்' என்றார்.
இதற்கு எம்.எஸ்.வி.யோ, ' அது அபூர்வமோ அல்லது அரிய கண்டுபிடிப்போ இல்லை. அனைவருக்கும் தெரிந்த மெட்டுதான். 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்ற பஜனையின் இழைகளை எடுத்து கட்டை சுருதியில் புது நெசவு செய்தேன். அதுதான் அச்சம் என்பது மடமையடா..!' என்றார்.