தினமணி கதிர்

மைக்ரோ கதை

தினமணி

"நளினி குட்டி, சமத்தா தூங்கப் போம்மா? அம்மாவுக்கு நிறைய வேலை இருக்கும்மா? சொன்னா கேளு..'' என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள் நளினியின் அம்மா. 

அங்கு வந்த அவள் பாட்டி, "நளினி.. 

இங்கே வா?  நான் உனக்கு கதை சொல்றேன்'' என்றார். பாட்டியுடன் சென்றாள் நளினி.

"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.''

"ஹூம் ..''

"அவர் ரொம்ப நல்ல ராஜாவாம்....''

"ஹூம் ..''

"ஏழைகளுக்கு தானம் செய்வாராம்.. எல்லோரும் சுகமா இருந்தாங்களாம் ..''

"ஹூம்...''

"ஒரு நாள்.. திடீர்ன்னு ........அங்கே ........''

"அம்மா...பாதி கதையில பாட்டி தூங்கிப் போயிட்டாங்க?'' என்று நளினி கூச்சலிட, பாட்டியின் குறட்டை சத்தம் வீடே அதிர்ந்தது.
 

- கே. அம்புஜவல்லி,  புத்தூர்-620017.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலேசியா முருகன் கோயிலில் எச்.வினோத் சாமி தரிசனம்!

வரலாறு காணாத வகையில் சிகரெட் விலை ரூ.18-லிருந்து ரூ.72-ஆக உயர வாய்ப்பு!

பொங்கலுக்கு ரூ.5000 கொடுக்க வேண்டும்: இபிஎஸ்

150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் முதல் இலங்கை வீராங்கனை!

இது என் கடைசி யுத்தம்: ராமதாஸ் உருக்கமான விடியோ பேச்சு!

SCROLL FOR NEXT