அப்படீங்களா!
வைரஸ்களை பரப்பும் முகம் தெரியாதவர்கள் குறித்து...
சமூக ஊடகங்கள், இ.மெயில், எஸ்.எம்.எஸ். போன்றவற்றில் பி.டி.எஃப்., வீடியோ, ஜிப் உள்ளிட்ட வகைகளில் தகவல்களை முகம் தெரியாதவர்கள் அனுப்பி, வைரஸ்களை பரப்புகின்றனர்.
தற்போது இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான மோதலின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான ஆஃபுகளில் இருந்து வைரல்களை அனுப்பும் முயற்சியும், பொய் செய்திகளைப் பரப்புவதும் நடைபெற்றன.
இந்தத் தகவல்களை ஓபன் செய்தால், சிறிது நேரம் பிடிக்கும். அப்போதே உஷாராக இருக்க வேண்டும். நமது கைப்பேசியில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். இப்படி வந்தால் உடனடியாக, கைப்பேசி, கணினி, மடிக்கணினிகளை 'ஆன்டி வைரஸ்' ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி செய்தால் உடனடியாக நம்மைக் காத்து கொள்ளலாம்.
Advertisement
இரண்டாவதாக, 'சைபர்கிரைம்' இணையதளத்துக்குச் சென்று, தகவல்கள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து பதிவு செய்தால், அந்த ஆஃப் தடை செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.
-ஹர்ஷா இ.தென்னரசு, பெங்களூரு.