முகப்பு
எம்.எஸ்.விசுவநாதன், சந்திரபாபு
தினமணி கதிர்

தமிழ்ப் படஉலகில் 'சென்னை பாஷை'

தமிழ்ப் படஉலகில் 'சென்னை பாஷை' குறித்து...

தினமணி கதிர்

தமிழ்ப் படஉலகில் 'சென்னை பாஷை'

தமிழ்ப் படஉலகில் 'சென்னை பாஷை' குறித்து...

Updated On : 19 மே, 2025 at 11:18 AM
எம்.எஸ்.விசுவநாதன், சந்திரபாபு
பகிர்:

* உலகில் உள்ள இசை வகைகளைப் புகுத்தி, தமிழ்ப் படங்களை எளிமைப்படுத்தியவர் எம்.எஸ்.விசுவநாதன்.

'பட்டத்து ராணி' பாடலில் எகிப்திய இசை. 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது..' பாடலில் 'பெர்சியன் இசை. 'பன்சாயி காதல் பறவை' பாடலில் ஜப்பானிய இசை. 'யார் அந்த நிலவு' பாடலில் லத்தீன் இசை. 'கண் போன போக்கில் கால் போகலாமா..' படத்தில் ரஷ்ய இசை. 'முத்தமிட நேரமெப்போ..' பாடலில் மெக்சிகன் இசை போன்ற இசைகளை தமிழ்த் திரையுலகுக்கு அவர் கொண்டு வந்தார்.

'முத்தான முத்தல்லவோ' எனும் பாடலுக்கு அவர் 20 நிமிடங்களில் இசை அமைத்தார். 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடலுக்கு இசையமைக்க அவருக்கு இரண்டு மாதங்கள் ஆகின.

* தமிழ்ப் படஉலகில் 'சென்னை பாஷை' என்னும் ஒன்றை முதன்முதலாக அறிமுகம் செய்தவர் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. 'சகோதரி' என்னும் படத்தில் வந்த பால்காரனைப் பார்த்துதான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிந்துகொண்டனர். ஒரு படத்துக்குத் தரும் 7 நாள்கள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் சந்திரபாபு.

*' கூண்டுக்கிளி' படத்துக்காக, எம்.ஜி.ஆருக்கான டூயட்டுக்காக எழுதப்பட்ட பாடல் அது. எழுத்தாளர் விந்தன் எழுதி, கே.வி.மகாதேவன் இசையமைத்தது. படத்தின் நீளம் கருதி இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா அந்தப் பாடலை படத்தில் வைக்கவில்லை. எம்.ஜி.ஆரை பெரிதும் கவர்ந்த அந்தப் பாடலை 'குலோபகாவலி'யில் வைக்க விரும்பினார். கே.வி.மகாதேவனின் அனுமதி பெற்று, விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையமைக்க, ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய அந்தப் பாடல் சூப்பர் ஹிட். அந்தப் பாடல் என்ன தெரியுமா?

''மயக்கும் மாலை பொழுதே நீ போ! போ! இனிக்கும் இன்ப நிலவே நீ வா! வா!'.

* 'மாட்டுக்கார வேலன்' படத்தை இயக்க முதன்முதலில் டி.ஆர்.ராமண்ணாவை ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவர் இயக்கிவந்த 'சொர்க்கம்' படம் முடிவடையாத நிலையில், எம்.ஜி.ஆரிடம் ப.நீலகண்டன் என்பவரை அறிமுகப்படுத்தி, இயக்க உதவி செய்தார். படம் சூப்பர் ஹிட்.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

*நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்தா மட்டுமல்ல; அவர் எப்போதும் நகைச்சுவை உணர்வோடு வாழ்ந்தவர். அவரது அறுபதாம் திருமணத்துக்கு 'நேரம் ஆகிறது மாலையை மாத்துங்கோ...' என்று சாஸ்திரிகள் கூறியிருக்கிறார். 'அதெல்லாம் முடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. கமல்ஹாசன் வரட்டும். அவர் வந்தவுடன்தான் மாலையை மாற்றுவேன். எனக்கு எல்லாம் கமல் சார்தான். அறுபது வயது வரை என் மனைவி என்னோடு வாழ்ந்துவிட்டாள். ஒரு பத்து நிமிடங்கள் காத்திருக்க மாட்டாளா?'' என்று சொல்லியிருக்கிறார். பின்னர், கமல்ஹாசன் வந்ததும் மாலையை மாற்றியிருக்கிறார்.

-சு.மணிவண்ணன், கீழ்க்கட்டளை.

முழு கட்டுரையைப் படிக்க →