முகப்பு
தினமணி கதிர்

மைக்ரோ கதை

மைக்ரோ கதை குறித்து...

Updated On : 24 நவம்பர், 2025 at 12:13 PM
பகிர்:

புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் தன் வீட்டு வாசலில் கழுதை படம் போட்டு, 'என்னைப் பார் யோகம் வரும்' என்ற போர்டை மாட்டி வைத்திருந்தார்.

அவருடைய வீட்டுக்கு வந்த சக விஞ்ஞானிகள் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, 'ஒரு விஞ்ஞானியாக இருந்துகொண்டு இப்படி போர்டு மாட்டி வச்சிருக்கீங்களே, இது மூடநம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டனர்.

''நான் நம்பவில்லை. ஆனால், 'நீங்கள் நம்பாவிட்டாலும்கூட அது அதிர்ஷ்டம் தரும்' என்று இதைக் கொடுத்தவர் சொன்னார்.'' என்றார் விஞ்ஞானி.

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.

முழு கட்டுரையைப் படிக்க →