'என்னை கைது பண்ணதுக்கு நாடு கொந்தளிக்கலையா?'
'ரிலீஸ் பண்ணா அது நடக்கும், தலைவரே!'
-அ.ரியாஸ், சேலம்.
'சர்வர், கெட்டிச் சட்னி வைக்கலியே?'
'டிப்ஸ் வைப்பீங்கன்னு சொன்னா கொண்டு வரேன், சார்!'
'போர்க்களத்தில் 'இந்த முறையும் வெற்றி' என்று மன்னர் ஆர்ப்பரிக்கிறாரே?'
'இந்தப் போரிலும் புறமுதுகு பாதை எந்தப் பக்கம் என்று எளிதில் கண்டுபிடித்து விட்டாராம்!'
-எம்.ஏ.ஆதம், அரக்கோணம்.
'பகல்ல தூங்குறப்பவும் கனவு வருதே, டாக்டர்?'
'வந்துட்டுப் போகட்டுமே... அது உங்க ஆபீஸ் ஸ்டாப்பை டிஸ்டர்ப் பண்ணப் போகுதா என்ன?'
-பேகம்பூர் ஷம்மு, திண்டுக்கல்.
'பொங்கலோ பொங்கல்னு எதிர் வீட்டு வாசல்ல யார் கூவுறது?'
'ஆன்லைன்ல ஆர்டர் பண்ணின பொங்கல் பார்சல் டெலிவரி மேன்!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
' மீன் தொட்டியில் இருக்கும் மீனுக்கு இனிமேல் தீனிப் போடாதே!'
'எதுக்குங்க?'
'மீன் சாப்பிடுவதை நிறுத்தணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு !'
-ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.
'மாசம் எவ்வளவு சம்பாதிக்கிறீங்க?'
'செலவு போக பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கக் கூடிய அளவுக்கு சம்பாதிக்கிறேன்!'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'இளவரசருக்கு பைன் போட்டுவிட்டார்களா, ஏன்?'
'நோ ஹார்ன் ஜோனில், அவர் ஏறி வந்த குதிரை பயங்கரமாக கனைத்ததாம்!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'உங்க வீட்டு பிரிட்ஜில் மேலடுக்கில் இருந்து கீழடுக்கு வரைக்கும் கடந்த பத்து நாள் தேதியும் எழுதி வச்சிருக்கீயே, ஏன் ?'
'எந்தெந்தத் தேதியில எடுத்து வச்சதுன்னு மறந்து போகுது, அதான் !'
-எம்.பி.தினேஷ், கோவை - 25.
'பொண்டாட்டி ஊருக்குக் கிளம்பினா நான் ரொம்ப சோகமா இருப்பேன்!'
'அவ்வளவு பிரியமா அவுங்க மேல?'
'இல்ல... சந்தோஷத்தை வெளியே காட்டினா, உடனே பயணத்தை கேன்சல் பண்ணிடுவா!'
'உன் புருசன் உன்னை 'சாந்தா' ன்னு கூப்பிடாம, ஏன் 'சந்தா' ன்னு கூப்பிடறாரு?'
'மாசமாசம் எனக்காக நிறையப் பணம் செலவழிக்கிறாராம்; அதைத்தான் அப்படிச் சொல்றாரு!'
'ஸ்கூலுக்கு போகும்போது இப்படி அழுதுகிட்டேவா போவாங்க... நான் எப்படிச் சிரிச்சுக்கிட்டே வரேன் பாரு?'
'நான் படிக்கப்போறேன்... நீங்க மிஸ்ஸை பார்க்கல்ல வர்றீங்க?'
'என்னது.... மைக்ரோ இட்லியா... அப்படின்னா?'
'மினி இட்லியைவிட சின்னதா இருக்கும், சார்!'
'அவன் குடிக்கிறவன்தான், நேர்மையானவன்னு எப்படிச் சொல்றே?'
'சரக்கடிச்சிட்டு பஸ்சுல போகும்போது, தன் ஒருத்தனுக்கு மட்டுமே ரெண்டு டிக்கெட் வாங்கினான்னா பார்த்துக்க!'
'எல்லா விமர்சனங்களுக்கும் தலைவர் சாதுர்யமா பதில் சொல்லிச் சமாளிச்சிடுவாரு!'
'எப்படிச் சொல்றீங்க?'
'உங்களுக்கு இரட்டை நாக்குன்னு எதிர்க்கட்சித் தலைவர் சொல்றாரேன்னு கேட்டதுக்கு, ' ஆமாம். உள் நாக்கு ஒண்ணு, வெளி நாக்கு ஒண்ணு'ன்னு சொல்லிட்டாரே!'
'டி.வி. சீரியல்ல நான் 25-வருஷமா நடிச்சிட்டிருக்கேன்...!'
'சுமாரா எத்தனை சீரியல்ல நடிச்சிருப்பீங்க?'
'ஒரே ஒரு சீரியல் தாங்க ... அதுவே இன்னும் முடியலை!'
'ஒண்ணு போனா ஒண்ணு வரும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு!'
'எப்படிச் சொல்றே?'
'வடை ஊசிப்போனா, அதுல நூல் வருதே!'
-வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.