கணினி தகுதித் தேர்வு எழுதத் தயாரா?
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும், கணினி தகுதித்தேர்வு எழுத விரும்புபவர்கள் நவம்பர் மாதம், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும், கணினி தகுதித்தேர்வு எழுத விரும்புபவர்கள் நவம்பர் மாதம், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷன் எனப்படும் தேர்வினை வரும் டிசம்பர் மாதம் நடத்துகிறது. 10 ஆம் வகுப்பு மற்றும் இளநிலை முதுநிலை தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அல்லது ஹையர் கிரேடு தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த கணினித் தகுதித் தேர்வினை எழுதலாம்.
தேர்வு எழுத விரும்புபவர்கள் இயக்குநரகத்தின் இணையதளமான, http:www.tndte.comota.html மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் நவம்பர் 16ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதே இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதை அச்செடுத்து நிரப்பி உரிய சான்றிதழ்களுடன் (சான்றொப்பத்துடன்) நவம்பர், 23ம் தேதிக்குள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.
டிசம்பர்-26 ஆம் தேதி முதல் தாளுக்கான தேர்வும், 27 ஆம் தேதி இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடைபெறும். மற்ற விபரங்களை இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.