டெக்ஸ்டைல் துறையின் ஒரு பகுதியாக விளங்கும் பட்டு தொழில்நுட்ப படிப்புகளை படித்து அது சம்பந்தமான வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
உடுத்தும் உடையில் முக்கியமாக அனைவராலும் விரும்பப்படுவது பட்டுத் துணியாகும். ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் பட்டு துணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதனால் பட்டுத் துணிக்கான தேவை மிகவும் அதிகம். பட்டுத் துணி கலாசாரத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
தற்போது அனைத்து துறைகளும் மிகவும் அபரிமிதமாக தொழில் நுட்ப வளர்ச்சி பெற்றுள்ளன. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அனைவரும் தங்களை மாற்றிக் கொள்கின்றனர். பட்டு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்களுடைய தொழிலில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்த விரும்புகின்றனர். புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தியும் வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் பட்டு தொழில் நுட்பம் படித்தவர்களின் உதவி தேவைப்படுகிறது. அவர்களை வேலைக்கு அமர்த்த தொழில் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றனர். அதனால் பட்டு தொழில் நுட்பம் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் கணிசமாக இருந்து
வருகின்றன. அதனால் பட்டு தொழில் நுட்பம் குறித்த படிப்புகளைப் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.
பி.இ. சில்க் டெக்னாலஜி படிப்பு நடத்தும் கல்வி நிறுவனம் :
Bihar Institute of Silk and Textiles, Bhagalpur, Bihar.
Government Sri Krishnarajendra Silver Jubliee Technological Institute, Bangalore.
Uttar Pradesh Technical University, Lucknow.
Visvesvaraya Technological University, Belgaum.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.