முகப்பு
மகளிர்மணி

வீட்டு வைத்தியம்!

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பாட்டில் முருங்கைக் கீரை சேர்த்து வந்தால், பால் அதிகம் சுரக்கும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:34 AM
பகிர்:

  தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பாட்டில் முருங்கைக் கீரை சேர்த்து வந்தால், பால் அதிகம் சுரக்கும்.

  தேநீரில் ஏலக்காயும், நான்கு, ஐந்து துளசி இலைகளும் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், ஜலதோஷம், இருமல் முதலானவை நீங்கிவிடும்.

  முள்ளங்கியை அரைத்துச் சாறு எடுத்து தடவி வந்தால் எல்லாவிதமான சரும நோய்களும் அகலும்.

  வாரம் ஒருமுறை பாகற்காயைச் சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்றிலுள்ளப் பூச்சிகள் மடிந்துவிடும்.

  வாழைப் பிஞ்சோடு பருப்பும், தேங்காயும் சேர்த்து காரம் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

  பப்பாளிப் பழத்தை மாம்பழத் துண்டுகள் மாதிரிப்போட்டு தேனில் ஊரவைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →