வீட்டு வைத்தியம்!
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பாட்டில் முருங்கைக் கீரை சேர்த்து வந்தால், பால் அதிகம் சுரக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பாட்டில் முருங்கைக் கீரை சேர்த்து வந்தால், பால் அதிகம் சுரக்கும்.
தேநீரில் ஏலக்காயும், நான்கு, ஐந்து துளசி இலைகளும் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், ஜலதோஷம், இருமல் முதலானவை நீங்கிவிடும்.
முள்ளங்கியை அரைத்துச் சாறு எடுத்து தடவி வந்தால் எல்லாவிதமான சரும நோய்களும் அகலும்.
வாரம் ஒருமுறை பாகற்காயைச் சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்றிலுள்ளப் பூச்சிகள் மடிந்துவிடும்.
வாழைப் பிஞ்சோடு பருப்பும், தேங்காயும் சேர்த்து காரம் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.
பப்பாளிப் பழத்தை மாம்பழத் துண்டுகள் மாதிரிப்போட்டு தேனில் ஊரவைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.