• கிராம்பை அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி நீங்கும். மூக்கின் மீது பற்றுப்போட ஜலதோஷம் விலகும்.
• வறுத்த கிராம்பு நான்கும், வறுக்காத கிராம்பு நான்கும் வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட இருமல் நீங்கும்.
• வெந்நீரில் நசுக்கிய கிராம்பைப் போட்டு ஊறவைத்து, மூன்று முறை தர கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும்.
( "கிராம்பின் மருத்துவப் பயன்கள்' என்ற நூலிலிருந்து)
- நெ.இராமன்