மகளிர்மணி

போருக்குத் தயாராகியிருக்கிறாள்! 

ஸ்ரீ


'ராஜா ராணி' தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அதே சீரியலில் தன்னுடன் கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து மணந்தார். ஆல்யா சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். அவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின் தொடர்கிறார்கள். சமீபத்தில்தான் ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை தற்போது 1.9 மில்லியனைத் தொட்டுள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளார் ஆல்யா . டிவி நடிகை ஒருவருக்கு இத்தனை ஃபாலோயர்கள் இருப்பது இதுவே முதல்முறை என சின்னத்திரை வட்டாரத்தில் பேசப்படுகிறதாம்.

இதுகுறித்து அவரது கணவர் கூறுகையில், ""நாங்கள் எதிர்பார்த்தது போலவே பெண் குழந்தை பிறந்ததில் எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். ஆனால், இந்த மகிழ்ச்சியை கொண்டாடுகிற மனநிலை இப்போது இல்லை. காரணம், உலகமே கரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இந்தச் சூழல்தான். இதைப் போர் என்று சொல்வது தவறே இல்லை. பிறந்த அடுத்த நொடியிலேயே இந்தப் போருக்குத் தயாராகியிருக்கிறாள் எனது மகள்'' என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT