நோய்களை தடுக்கும் ஓமம்!
நோய்க்கிருமிகள் உடலில் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு. ஓமத்தில் இலைகள், விதைகள் என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.
நோய்க்கிருமிகள் உடலில் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு. ஓமத்தில் இலைகள், விதைகள் என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. ஈக்குச்சி போல் இருப்பார்கள். எவ்வளவு சத்துகள் நிறைந்த உணவினை உண்டாலும் தேறாது. சிலர் குண்டாக இருப்பார்கள் உடலில் வலிமை இருக்காது. இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வர உடல் வலிமை பெறும்.
வயிற்றுவலி, வயிற்றுப் பொருமலால் அவதிப்படும் சிறியவர்களோ, பெரியவர்களோ நூறு கிராம் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட பாதிப்புகள்
பரிபூரணமாக அகலும்.
அஜீரணக் கோளாறினால் அவதிப்படுபவர்களுக்கும் இது கைகண்ட மருந்து. சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, திப்பிலிவேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பரிபூரண குணம் கிடைக்கும்.