பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து குறுகிய காலத்தில் பிரபலமானவர்!
ஜீ தமிழ் தொலைகாட்சியின் தொடர்களில் முதலிடத்தில் இருப்பது "செம்பருத்தி' தொடர். இதில் அறிமுகமாகிய குறுகிய காலத்திலேயே பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இந்த தொடரின் நாயகி பார்வதி.
ஜீ தமிழ் தொலைகாட்சியின் தொடர்களில் முதலிடத்தில் இருப்பது "செம்பருத்தி' தொடர். இதில் அறிமுகமாகிய குறுகிய காலத்திலேயே பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இந்த தொடரின் நாயகி பார்வதி. இவரின் நிஜப்பெயர் ஷபானா ஷாஜகான்.
இவரை செல்லம்மாக "ஷபு' என்றுதான் அழைக்கிறார்கள். இவரது பூர்விகம் கேரளா, ஆனால் படித்தது, வளர்ந்தது எல்லாம் மகாராஷ்டிராவில். நடிப்பு பக்கம் வந்ததால் படிப்பை தொடர முடியாததால், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலமாக பி.பி.ஏ படித்துள்ளார். சிறு வயதிலேயே இவருடைய தந்தை காலமானதால், அம்மா மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒரு மலையாள சீரியலில் நடித்தேன். அதன் தயாரிப்பு டீம் தமிழ்நாட்டுக்காரங்க. அவங்கமூலம்தான் தமிழ் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. "நடிக்க முடியுமா?'னு கேட்டாங்க. உடனடியா ஒத்துகிட்டேன்'' என்றார்.