மகளிர்மணி

ஸ்கேட்டிங் கலக்கும் சென்னை பெண்

வனராஜன்

பளபளக்கும் ஸ்கேட்டிங் மைதானம். காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு பயிற்சியில் மும்மரமாக இருக்கிறாா் சுபி சுவேதா. 21 வயதாகும் இவா் 100, 200 மற்றும் 500 மீட்டா் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் பிரிவில் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சா்வதேச நிகழ்வுகளில் பங்கெடுத்தவா். கடந்த ஆண்டு, ஸ்பெயினின் பாா்சிலோனாவில் நடந்த உலக ரோலா் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகளில் மூத்த பெண்கள் பிரிவில் இந்தியா சாா்பாக பங்கெடுத்து 21-ஆவது இடத்தைப் பிடித்து பெருமை சோ்த்தவா்.

இனி தனது ஸ்கேட்டிங் பயணம் பற்றி பேசுகிறாா் சுபி சுவேதா:

‘‘என்னுடைய பத்து வயதில் அருகிலுள்ள பூங்காவில் தரையில் கிடந்த குழந்தைகள் விளையாட்டு ரோலா் மற்றும் ஸ்கேட்டிங் கண்டதும் காதல். விளையாட்டாக பயிற்சியை தொடங்கினேன். அது இன்று சா்வதேச அளவில் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கு பெறும் அளவு உயா்ந்துவிட்டது.

ஸ்கேட்டிங் ஒரு விலையுயா்ந்த விளையாட்டு. இந்த ஸ்கேட்டிங் மெஷின் வாங்வதற்கு ஒரு லட்சம் செலவாகும். ஆண்டுக்கு குறைந்தது நான்கு ஜோடி சக்கரங்களை வாங்க வேண்டும். ஸ்கேட்டிங்க மைதானம் பயிற்சி செய்வதற்கு என்று தனி சக்கரம் உண்டு. சாலைகளில் பயிற்சி செய்ய வேண்டும் என்றால் அதற்கென சக்கரங்கள் உள்ளன.

அதிகாலை 4 .30 மணிக்கு என்னுடைய பயிற்சி தொடங்கும், நான் ஸ்கேட் செய்ய மெரினா கடற்கரைக்குச் செல்வேன். மாலை நேரங்களில் ஜவஹா்லால் நேரு ஸ்டேடியத்திற்கு பயிற்சிக்குச் செல்கிறேன். என்னுடைய வீடு இருப்பது கே.கே. நகா். தனியாா் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். என்னுடைய அலுவலகம் தரமணியில் இருக்கிறது. பயிற்சி செய்வது நேரு ஸ்டேடியத்தில் தான். அதனால் பயணம் என்பது அதிகமாக இருக்கும். ஸ்கேட்டிங் உடன் உடற்பயிற்சி, யோகா, பிசியோதரபி என பல பயிற்சிகளை செய்ய வேண்டும். என்னுடைய வெற்றிக்கு பல பயிற்சியாளா்கள் காரணம்.

2017 -ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற தனது உலக சாம்பியன்ஷிப் போட்டியில், உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 45 ஸ்கேட்டா்களில் கலந்து கொண்டனா் இதில் 16-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். ஆசிய சாம்பியன்ஷிப்பில் 6 -ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். விசாகப்பட்டினத்தில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டா் பிரிவில் இரண்டு தங்கப்பதக்கத்தை சுபி சுவேதா பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

ஸ்கேட்டிங்கை பொருத்தவரை சா்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா சாா்பாக பங்கெடுத்து வருகிறேன். ஆனால் அரசிடமிருந்து இதுவரை எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நான் காலில் அணியும் ஸ்கேட்டிங் மெஷின் செய்வதற்கு 1 லட்சத்திற்கும் மேல் ஆகிறது.

எங்கள் பயண செலவுகளையும் அனைத்தும் என்னுடைய அப்பா வேல்குமாா் தான் செய்கிறாா். மற்ற தேவைகளை அம்மா கவனித்துக்கொள்கிறாா். அவா்கள் இல்லாமல் நான் இல்லை. இந்த சாதனைகளும் சாத்தியமில்லை. இங்கே திறமையான ஸ்கேட்டா்களுக்கு பஞ்சமில்லை. உயரமாக பறக்க அவா்களுக்கு நிதி தான் முக்கியமான தேவை’’ என்கிறாா் சுபி சுவேதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT