மகளிர்மணி

ப்ரோக்கோலி  பக்கோடா 

ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ராதிகா அழகப்பன்

தேவையானவை:

ப்ரோக்கோலி - 1
கடலைமாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 3
இஞ்சி துருவல் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி


செய்முறை:

ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இத்துடன் நறுக்கிய ப்ரோக்கோலி, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சித் துருவல், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், மாவுக் கலவையை சிறிது, சிறிதாக எடுத்து, விரல்களால் பிசறிவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். ப்ரோக்கோலி பக்கோடா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் வாட்டி வதைக்கும் குளிா்- வெப்பநிலை 3 டிகிரியாக குறைந்தது

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

SCROLL FOR NEXT