மகளிர்மணி

திடீர் ரசம் தயாரிக்க...

தயிர் வடைக்கு உளுந்து அரைக்கும்போது மாவின் அளவிற்குத் தகுந்தாற்போல் ஒன்று அல்லது பாதி வாழைப்பழம் போட்டு அரைத்து தயிர் வடை செய்தால் தயிர்வடை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

சி.ஆர்.ஹரிஹரன்


தயிர் வடைக்கு உளுந்து அரைக்கும்போது மாவின் அளவிற்குத் தகுந்தாற்போல் ஒன்று அல்லது பாதி வாழைப்பழம் போட்டு அரைத்து தயிர் வடை செய்தால் தயிர்வடை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

உளுந்தம் பருப்பு வடை செய்யும்போது சிறிது ஐஸ்கட்டியைச் சேர்த்து அரைத்து தேங்காய்த் துருவல் கலந்து வடை செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

மாங்காய்த் தொக்கு செய்யும்போது நெல்லிக்காய் அளவு வெல்லம் போட்டுக் கிளற, மாங்காய்த் தொக்கு சுவையாக இருக்கும்.

பூரி பொரிக்கும்போது எண்ணெய்யில் இரண்டு தேக்கரண்டி நெய்யைக் கலந்து பூரி செய்ய, அதன் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.

கொஞ்சம் புளி கரைத்த நீரில் ஒரு தக்காளிப் பழத்தைப் பிசைந்து விட்டு சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து, சிறிது சீரகத்தை கசக்கிப்போட்டு அடுப்பில் வைத்து எடுத்தால் ஐந்தே நிமிடத்தில் திடீர் ரசம் தயார்.

சாம்பாருக்கு துவரம்பருப்பு வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையாக இருப்பதுடன் சீக்கிரமாக ஊசியும் போகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது: காங்கிரஸ் விமா்சனம்

ஒரு லட்சத்துக்கும்மேல் வருவாய் ஈட்டிய ஓட்டுநா், நடத்துநா்களுக்குப் பரிசு வழங்கல்!

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே இரு வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு!

மேல்மலையனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் திறப்பு!

SCROLL FOR NEXT