நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காயை நன்றாகக் கழுவி, ஆவியில் இரண்டு நிமிடம் வேக வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அதில் வேக வைத்த நெல்லிக்காய்களைச் சேர்த்து வதக்கவும்.
தேவையானவை:
நெல்லிக்காய் - 20
வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம்
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - கால் கிண்ணம்
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
வெந்தயப்பொடி - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
Advertisement
Advertisement
நெல்லிக்காயை நன்றாகக் கழுவி, ஆவியில் இரண்டு நிமிடம் வேக வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அதில் வேக வைத்த நெல்லிக்காய்களைச் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி எடுக்கவும். ஆறியதும், அந்தக் கலவையில் எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு கலந்துகொள்ள, நெல்லிக்காய் ஊறுகாய் தயார். இந்த ஊறுகாயை ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.