முகப்பு
மகளிர்மணி

கத்திரிக்காய் மிளகாய்  பொடி வறுவல்

மிளகாய்ப் பொடி செய்ய முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி  நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, அவற்றை

Updated On : 17 நவம்பர் 2021, 6:00 am IST
பகிர்:


தேவையானவை: 

சின்ன கத்திரிக்காய் - 10
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது 
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு 
நல்ல எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
தேங்காய் - அரை மூடி துருவி அறைத்தது 
கொத்துமல்லி - பொடியாக நறுக்கியது 
மிளகாய் பொடிக்கு: கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
மல்லி - 3 தேக்கரண்டி 
எள் - 5 தேக்கரண்டி
வரமிளகாய் - 10
மிளகு -  அரை தேக்கரண்டி
புளி கரைசல் - கால் கிண்ணம்
வேர்க்கடலை - 1 தேக்கரண்டி


செய்முறை: 

Advertisement

Advertisement

மிளகாய்ப் பொடி செய்ய முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி  நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, அவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் கத்திரிக்காயை  மேல் உள்ள காம்பை முற்றிலும் நீக்காமல் சிறிய துண்டுகளாக வெட்டவும், அதை வாணலியில் சிறிது நல்லஎண்ணெய் விட்டு பொறித்து எடுக்கவும்.

பிறகு மீதம் உள்ள எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் கத்திரிக்காய்களைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் 1தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வறுக்கவும்.

கத்திரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்த மிளகாய்ப் பொடி கலவையை சீராக தூவி வெட்டி வைத்த கொத்துமல்லியை தூவி இறக்கவும். இதை கொஞ்சம் ரசம் அல்லது தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட  சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments