மகளிர்மணி

பிரண்டைஇலை துவையல் 

பிரண்டை இலை துவையல்.  பிரண்டை யின் ஓரங்களில் உள்ள நாரை எடுத்து, விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கவிதா பாலாஜி

தேவையானவை :

இளம் தளிரான பிரண்டை இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் - 2  தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:  

பிரண்டை இலை துவையல்.  பிரண்டை யின் ஓரங்களில் உள்ள நாரை எடுத்து, விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையைப் போட்டு நன்றாக வதக்கி எடுத்து விடவும். அடுத்து அதில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு தனியாக வறுக்கவும். வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும். அனைத்தும் அரை பட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையைச் சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும். சத்தான இஞ்சி பிரண்டை  இலை துவையல் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT