முகப்பு
மகளிர்மணி

கேரட்  ராகி அடை

ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில்  பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், மல்லித்தழையைப் போட்டு வதக்கி, கேரட்டை சேர்க்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பகிர்:

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 1 கிண்ணம்
துருவிய கேரட்  - ஒரு கிண்ணம்
மல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய்  - 2
புளித்த தயிர் -  அரை கிண்ணம்
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில்  பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், மல்லித்தழையைப் போட்டு வதக்கி, கேரட்டை சேர்க்கவும். கேரட் சிறிது வதங்கியதும், அதில் புளித்த தயிருடன் அரை டம்ளர்  தண்ணீர் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூளை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக போட்டுக் கிளறி, வெந்ததும் இறக்கி விடவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டெடுக்கவும். விருப்பப்பட்டால் கிளறும்போது சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →