மகளிர்மணி

டிப்ஸ்... டிப்ஸ்...

தினமணி

எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் இரணடு மேஜை கரண்டி கெட்டித் தயிர் சேர்த்து கிளறி இறக்கினால், உப்புமா அற்புதமாய் இருக்கும்.

கத்தரிக்காய் கூட்டோ, பொறியலோ எது செய்தாலும் கொஞ்சம் கடலைமாவைத் தூவி 5 நிமிடங்கள் கழித்து, இறக்கினால் மணம் கமகமவென இருக்கும்.

சூப் தயாரிக்கும்போது கார்ன்பிளேக்ஸூக்கு பதில் இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி, வெண்ணெயில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

தோசை, இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிளகாய்ப் பொடி தயார் செய்யும்போது, சிறிது அரிசியைப் பொரித்து சேர்த்தால் அதிக மணமும் புதுமையான ருசியும் கொடுக்கும்.

கொண்டைக் கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்குத் தேவையானதை முதல் நாள் ஊறப் போட மறுத்துவிட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்தப் பின்னர் குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்துவிடும்.

- சமையல் குறிப்புகள் 500 என்ற நூலிலிருந்து சி.பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று அமோகமான நாள்!

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT