முகப்பு
மகளிர்மணி

பனங்கிழங்கு  பொடி 

பனங்கிழங்கு மேல் தோல் உரித்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
பகிர்:

தேவையானவை

பனங்கிழங்கு -   4
மிளகாய் வற்றல்  -   2
பூண்டு -  4 பல்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் -  சிறிது

செய்முறை: 

பனங்கிழங்கு மேல் தோல் உரித்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் பனங்கிழங்கு சேர்த்து வேக விடவும். குக்கர் ஐந்து சத்தம் வந்த பின் இறக்கி இருபது நிமிடம் ஆற விடவும். 

பின் கிழங்கை வெளியே எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி நார் நீக்கி தனியே வைக்கவும். நறுக்கிய துண்டுகளை நன்கு காயவிடவும். இரண்டு நாள் காய்ந்த பின் இதனை,பூண்டு பல், மிளகாய் வற்றலுடன்  மிக்ஸியில்  இட்டு பொடிக்கவும். 
இந்த பொடியினை காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து சாப்பிடவும். அதிக நார் சத்து நிறைந்த  இந்த பொடி  மலசிக்கல் நீக்கும் நல்ல மருந்தாகவும் பயன்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.