மகளிர்மணி

எளிய வைத்தியம்

கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகுகளைத் திணித்து, திறந்தவெளியில் ஓர் இரவு வைத்து மறுநாள் காலையில் இந்த மிளகுகளைச் சாப்பிட இருமல் நீங்கும்.

சி.ஆர்.ஹரிஹரன்


கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகுகளைத் திணித்து, திறந்தவெளியில் ஓர் இரவு வைத்து மறுநாள் காலையில் இந்த மிளகுகளைச் சாப்பிட இருமல் நீங்கும்.

தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து, 40 நாள்களுக்குச் சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்லபலம் ஏறும். உடலில் சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் ஏற்படும்.

மாதவிலக்கு வயிற்றுவலி நீங்க அதிகாலையில் 9 துளசி இலைகளை மென்று நின்று நீர் பருகி வர வலி நீங்கும்.

துளசி இலையுடன் கொஞ்சம் உப்பையும் சேர்த்து, நன்றாகக் கசக்கி பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் வலி குறையும்.

மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து உட்கொண்டால் வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.

ஒரு டம்ளர் எலுமிச்சைப் பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் வைத்து, குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனுடன் மாதுளம் பழச்சாறு கலந்து ஒரு மாதம் காலம் அருந்தி வந்தால் ரத்தச் சோகை நீங்கும். 

இரவில் படுக்கச் சொல்லும் முன் தேனையும் வெங்காய துண்டுகளையும் மிதமான சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

 வாழைக்காயைப் பயன்படுத்தியதும், அதன் தோலை வேக வைத்து துவையல் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண், அல்சரில் நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சை பழத் தோலைக் காயவைத்து, பொடி செய்து பல் துலக்கிவந்தால் வாய்துர்நாற்றம் இருக்காது.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிள்ளைகளுக்கு எலுமிச்சை சாறுடன் தேனை கலந்து கொடுத்தால், அந்தப் பழக்கம் மெல்ல நின்றுவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கழிவு மேலாண்மை மாதிரியை கடைப்பிடிக்கும் குடியிருப்பு நலச் சங்கங்கள்!

மனநலம் பாதித்தபெண்ணுக்கு பாலியல் தொல்லை உறவினரைக் கைது செய்ய போலீஸாா் தீவிரம்

மனித உணர்வுகளின் பதிவு

தாராசுரம் ஆற்றில் மாணவா் சடலம் மீட்பு

மாநகரின் சில பகுதிகளில் அக்.7 இல் மின்தடை

SCROLL FOR NEXT