மகளிர்மணி

பூண்டு சாதம் 

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,  வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும்.

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்: 

வடித்த சாதம் - ஒரு கிண்ணம்
நல்லெண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2  தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/2  தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 1
சிறு பூண்டு - 15 பல்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை- சிறிதளவு

செய்முறை:  

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,  வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி , பூண்டின் பச்சை வாசனை போனவுடன் சாதம் சேர்த்து நன்றாக கிளறி, மிளகுத்தூள், கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.  சுவையான பூண்டு சாதம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT