நவதானிய மிக்சர்
பட்டாணியை இரண்டு நாள் ஊற வைக்க வேண்டும். பாசிப் பயறு, தட்டப் பயறு, காணாப் பயறு, கடலைப் பருப்பை ஒருநாள் ஊற வைக்க வேண்டும்.
தேவையானவை:
கடலைப் பருப்பு- 200 கிராம்
பாசிப் பருப்பு- 200 கிராம்
தட்டப் பயறு- 200 கிராம்
காய்ந்த பட்டாணி-50 கிராம்
காணப் பயறு- 100 கிராம்
மிளகாய்த் தூள்- 1 கரண்டி
சீரகத் தூள்- 1 கரண்டி
எண்ணெய்- உப்பு- தேவையான அளவு
செய்முறை:
Advertisement
பட்டாணியை இரண்டு நாள் ஊற வைக்க வேண்டும். பாசிப் பயறு, தட்டப் பயறு, காணாப் பயறு, கடலைப் பருப்பை ஒருநாள் ஊற வைக்க வேண்டும். பின்பு கழுவி தண்ணீரை வடியவிட்டு சிறிதுநேரம் ஈரம்போக உலரவிட்டு, வாணலியில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாகப் பொரித்து எண்ணெயை வடியவிட வேண்டும். கறிவேப்பிலையையும் பொரிக்க வேண்டும். மிளகாய்த் தூள், சீரகத் தூள் கலந்து உப்புத்தூள் தூவி புரட்டி எடுக்க வேண்டும்.