அவியல் செய்யும்போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றுடன் சிறிது ஊறவைத்த கசகசாவைச் சேர்த்து அரைத்தால் அவியல் திக்காகவும், சுவையாகவும் இருக்கும்.
வாழைத்தண்டு கூட்டுப் பொரியல் செய்யும்போது, அத்துடன் சிறிது முருங்கைக் கீரையும் சேர்த்து செய்தால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
வாணலியில் ஒரு பிடி முருங்கைக் கீரையை நெய்விட்டு வதக்கி, சிறிது தேங்காய் சேர்த்து அரைத்துக் கொதிக்கும் சாம்பாரில் விட்டால் சுவை நன்றாக இருக்கும்.
அவல் உப்புமா செய்யும்போது, பயத்தம் பருப்பை நெத்துப் பதமாக வேகவைத்துச் சேர்த்து, கலந்து செய்ய சுவை அதிகமாக இருக்கும்.