இளம்பெண் ஐ.பி.எஸ். அதிகாரி..
இளம் வயதில் ஐ.பி.எஸ். பதவியேற்ற எஸ்.சுஷ்ஸ்ரீ
Updated On : 20 ஏப்ரல், 2024 at 8:44 PM
நாட்டின் இளம்பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருபத்து மூன்று வயதான எஸ்.சுஷ்ஸ்ரீ என்பவர் பணியாற்றுகிறார்.
கேரளத்தைச் சேர்ந்த இவர், தற்போது ஒடிஸா மாநிலத்துக்கு உள்பட்ட புவனேசுவரத்தில் டி.எஸ்.பி.யாக பணிபுரிகிறார். இவர்தான் மிக இளம் வயதில், ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர். இதனால் தனது பணி ஓய்வுகாலத்துக்கு முந்தைய பல ஆண்டுகள் காவல் துறையின் உயரிய பதவியான டி.ஜி.பி. பதவியை பல ஆண்டுகள் அவர் வகிக்கக் கூடும் என்கின்றனர் காவலர்கள்.