திருச்செந்தூர் திரிபாகம்
சலித்த கடலைமாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும், அடுப்பில் வைத்து, கட்டியில்லாமல் கிளறவும்.
தேவையானவை:
பால், கடலை மாவு,
சர்க்கரை- தலா 1 கிண்ணம்
பொடித்த முந்திரிப் பருப்பு,
நெய்- தலா கால் கிண்ணம்
குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம்- தலா 2 சிட்டிகை
செய்முறை:
சலித்த கடலைமாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும், அடுப்பில் வைத்து, கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்து எடுக்கும்போது, சர்க்கரை சேர்க்கவும். முந்திரிப் பருப்பு, நெய், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து கிளறவும். அல்வா பதத்துக்கு வரும்போது, அடுப்பை அணைக்கவும்.