முகப்பு
மகளிர்மணி

திருப்பதி கதம்ப சாதம்

பச்சைப் பயிறு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். புளியுடன் 2 தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

Updated On : 21 டிசம்பர், 2024 at 6:30 PM
திருப்பதி கதம்ப சாதம்
பகிர்:

தேவையானவை:

பச்சரிசி- 1 கிண்ணம்

பூசணிக்காய், கத்தரிக்காய், வாழைக்காய், பறங்கிக்காய் (துண்டுகளாக அரிந்து)- தலா 3 கிண்ணம்

புளி- எலுமிச்சைஅளவு

மஞ்சள் தூள்- அரை மேசைக்கரண்டி

பச்சைப்பயிறு- கால் கிண்ணம்

கறுப்பு உளுந்து, கறுப்பு எள், மிளகு- தலா மேசைக் கரண்டி

நெய்- 4 மேசைக்கரண்டி

உப்பு- சுவைக்கேற்பு

கறிவேப்பிலை- 2 ஆர்க்குகள்

செய்முறை:

பச்சைப் பயிறு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். புளியுடன் 2 தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். மேலும், 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். காய்கறிகள், அரிசி, நெய் சேர்த்து கிளறவும். வெந்து வரும்போது, பொடி சேர்த்துக் கிளறி அடுப்பை அமைக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →