முகப்பு
மகளிர்மணி

அரிசி அல்வா

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் வடிகட்டி தேங்காய்த் துருவல் சேர்த்து மைய அரைக்கவும்.

Updated On : 2 பிப்ரவரி 2026, 9:53 pm IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - ஒரு கிண்ணம்

தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்

Advertisement

பொடித்த வெல்லம் - ஒரு கிண்ணம்

நெய் - 4 தேக்கரண்டி

ஏலப்பொடி - அரை தேக்கரண்டி

முந்திரி, திராட்சை - தலா 10

செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் வடிகட்டி தேங்காய்த் துருவல் சேர்த்து மைய அரைக்கவும். ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து அடி கனமான பாத்திரத்தில் ஊற்றிக் கிண்டவும். வெந்ததும் ஒரு கிண்ணம் நீரில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி மாவில் சேர்த்து, மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். நெய் சேர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்ததும் ஏலப்பொடி, முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

கே நாகலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.