தேவையான பொருள்கள்:
அவல் 300 கிராம்
பச்சரிசி 400 கிராம்
வெல்லம் 200 கிராம்
ஏலக்காய் 5
நெய் தேவையான அளவு
செய்முறை:
அவலையும், அரிசியையும் தனித்தனியாக ஊர வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் முதலில் அரிசியை அரைக்க வேண்டும். பாதி அரைபட்டதும் அவலையும் போட்டு நைசாக அரைத்து அதிலேயே வெல்லத்தையும் ஏலக்காயையும் போட்டு அரைத்து தோசை மாவு பக்குவம் ஆனதும் பணியாரக் கல்லில் நெய்விட்டு குழிகளில் விட்டு எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.