முகப்பு
வாழைப்பூ குருமா
மகளிர்மணி

வாழைப்பூ குருமா

வாழைப்பூவின் உள்ளே இருக்கும் பூக்களை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் பின்னர் குறிப்பிட்டுள்ள மசாலா பொருள்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

மகளிர்மணி

வாழைப்பூ குருமா

வாழைப்பூவின் உள்ளே இருக்கும் பூக்களை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் பின்னர் குறிப்பிட்டுள்ள மசாலா பொருள்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

Updated On : 14 செப்டம்பர், 2024 at 6:30 PM
வாழைப்பூ குருமா
பகிர்:

தேவையான பொருள்கள்:

வாழைப்பூ - 1 (தனியாக எடுத்து நறுக்கியது)

பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

அரைக்க..:

சோம்பு - அரை தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - அரை கிண்ணம்

இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

பட்டை - 1 கிராம்பு-2

செய்முறை:

வாழைப்பூவின் உள்ளே இருக்கும் பூக்களை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் பின்னர் குறிப்பிட்டுள்ள மசாலா பொருள்களை அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்க வேண்டும். அதன்பின்னர், வாழைப்பூ, பச்சை மிளகாய் , வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவை மிக்க குருமா ரெடி.

முழு கட்டுரையைப் படிக்க →