முகப்பு
மகளிர்மணி

பாத வெடிப்பு சரியாக என்ன செய்ய வேண்டும்?

எலுமிச்சை சாறுடன் துளசி இலைச் சாற்றைக் கலந்து படை மீது தடவினால் போதும், படைமறைந்து விடும்.

Updated On : 12 டிசம்பர், 2025 at 8:13 AM
பகிர்:

ஆர் .ஜெ.

எலுமிச்சை சாறுடன் துளசி இலைச் சாற்றைக் கலந்து படை மீது தடவினால் போதும், படைமறைந்து விடும்.

ஒரு தேக்கரண்டி பன்னீர் எடுத்து கண்இமை முதலியவற்றின் மேல் மெதுவாக ஒத்தி எடுத்தால், கண் சோர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

கைகள் அழகு பெற எலுமிச்சைப் பழச்சாறு பிழிந்து கைகளில் பூசிக் கொண்டு அவை உலர்ந்த பிறகு பிறகு நீரில் கழுவி விட வேண்டும்.

தோல் வறட்சியாக இருந்தால் பால் ஏடு தடவி, பின் உலர்ந்தவுடன் சோப்புப் போட்டு வெந்நீரில் அலம்பி வந்தால், தோல் மிருதுவாகும் .

தும்மலைக் கட்டுப்படுத்த மிளகுத் தூள் செய்து புகையைச் சுவாசித்தால் உடனே நின்றுவிடும்.

நல்லெண்ணெய்யில் சிறிது பெருங்காயத்தைப் போட்டு சுட வைத்து இளஞ்சூடாகக் காதில் விட்டு வந்தால், காது வலி குணமாகும்.

விரலிமஞ்சளையும் வேப்பம் இலையையும் சேர்த்து நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து விடும் .

வாய் கசப்பாக இருந்தால், எலுமிச்சைப் பழச்சாறுடன் இஞ்சித் துண்டை ஊறவைத்துச் சாப்பிட்டால் நீங்கும்.

கண்களில் சுருக்கம், கருப்பு வளையும் இருந்தால் தினமும் படுக்கப் போகும் முன் தேயிலைத் தண்ணீர் கொண்டு கண்களைச் சுற்றிக் கழுவி வந்தால் அவை மறைந்து போகும்.

கிராம்பை தண்ணீர் விட்டு உறைத்து அந்தச் சாற்றை பரு உள்ள இடத்தில் தடவினால் பருமறைந்து போகும்.

எலுமிச்சம்பழச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நீர்க் கோவை நீங்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →