மகளிர்மணி

பிரெட் உப்புமா

முதலில் காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி, பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

பிரெட்- 15 (ஸ்லைஸ்)

வெங்காயம்- 2

பீன்ஸ்-3

தக்காளி, உருளைக்கிழங்கு, காரட்- தலா 1

கொத்துமல்லி- சிறிதளவு

பச்சை மிளகாய்- 4

உப்பு, எண்ணெய், பச்சைப்பட்டாணி, நெய்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி, பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். பின்னர், அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சூடானதும் லேசாக நெய்விட்டு பிரெட் துண்டுகளை வாட்டி தூளாக உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் அல்லது நெய்விட்டு நறுக்கிய கொத்துமல்லி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி, காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். கடைசியாக தேவையான உப்புடன் பிரெட் தூளையும் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், சிறிது நீர் தெளித்துக் கொள்ளலாம். ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியொரு சம்பவம் நடந்தால்... லாக்டவுன் - திரை விமர்சனம்!

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

SCROLL FOR NEXT