தேவையான பொருள்கள்:
சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூ- 1 கிண்ணம்
உப்பு, எண்ணெய், புளி- தேவையான அளவு
உளுத்தம் பருப்பு- அரை கிண்ணம்
காய்ந்த மிளகாய்- 8
பெருங்காயம்- சிறிதளவு
தனியா, வெந்தயம்- தலா 1 மேசைக்
கரண்டி
தேங்காய்- துருவியது அரை மூடி
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். வாழைப் பூவை சிறிது எண்ணெய் ஊற்றி, தனியாக வதக்கவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள பொருள்கள், உப்பு, தேங்காய்த் துருவல், புளி சேர்த்து தேவையான தண்ணீரைவிட்டு துவையல் பதத்துக்கு அரைக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.