புடலங்காய் தோசை
புடலங்காயைப் பொடியாக அரிந்துகொள்ளவும். மாவுகளையும் ரவையையும் காரப்பொடி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
தேவையான பொருள்கள்:
பிஞ்சுப் புடலங்காய் (பாம்புப் புடலாக இருந்தால் நலம்) நறுக்கிய தூள் - ஒரு கிண்ணம்
அரிசி மாவு - ஒரு கிண்ணம்
Advertisement
Advertisement
கடலை மாவு - அரை கிண்ணம்
வெள்ளை ரவை -அரை கிண்ணம்
காரப்பொடி - 4 மேஜை கரண்டி
பெருங்காயப்பொடி - கால் மேஜை கரண்டி
ஓமம் - அரை மேஜை கரண்டி
உப்பு - திட்டமாக
செய்முறை:
புடலங்காயைப் பொடியாக அரிந்துகொள்ளவும். மாவுகளையும் ரவையையும் காரப்பொடி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். புடலங்காய்த் தூளை கைகளால் நொறுக்கிப் பிசைந்து மாவில் சேர்த்து பத்து நிமிடம் ஊற விடவும். பின் தோசைக் கல்லைப் போட்டு, கல் காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி துடைத்து, பின் மாவை தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, திருப்பிப் போட்டு சிவக்க முறுமுறுப்பாக எடுக்கவும்.
கே நாகலட்சுமி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.