காய்கறி பணியாரம் 
மகளிர்மணி

காய்கறி பணியாரம்

புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, பச்சரிசி ஆகிய மூன்றையும் சுத்தம் செய்து, நன்றாக ஊறவைத்து, அரைக்கவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி, பச்சரிசி -

தலா அரை கிலோ

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

பச்சை மிளகாய்- 8

பீன்ஸ்- 100 கிராம்

கடலைப் பருப்பு- 50 கிராம்

கேரட்- 200 கிராம்

உளுத்தம் பருப்பு- 100 கிராம்

செய்முறை:

புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, பச்சரிசி ஆகிய மூன்றையும் சுத்தம் செய்து, நன்றாக ஊறவைத்து, அரைக்கவும். அந்த மாவில் உப்பு சேர்த்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும். பின்னர், கேரட் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், பீன்ஸ்களை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடலைப் பருப்பை நன்றாக வறுத்து, அத்துடன் கேரட், பீன்ஸ், மிளகாயை சேர்த்து சிறிது வதக்கி மாவில் கொட்டவும். பின்னர், அடுப்பில் குழிப்பணியார அச்சை வைத்து, குழிகளில் எண்ணெய் தடவி பணியாரங்களாக வார்த்து, இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

SCROLL FOR NEXT