தேவையான பொருள்கள்:
பச்சை மிளகாய்- 4
மிளகாய்த் தூள்- 4 தேக்கரண்டி
கடலை மாவு- 200 கிராம்
கோதுமை மாவு -100 கிராம்
தயிர் -100 கிராம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கொத்துமல்லி, புதினா- சிறிதளவு
பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்
கிழங்கு, பீட்ரூட், பெரிய வெங்காயம் - தேவையான அளவு
செய்முறை:
பட்டாணி, பீன்ஸ் , கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் , பெரிய வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
கடலை மாவு, கோதுமை மாவு, தயிர், உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து, அத்துடன் பொடியாக அரிந்த காய்கறிகள், மிளகாய்த் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், புதினா, கொத்துமல்லி கலந்து தயார் செய்து கொண்டு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெயை தடவி, இந்தக் காய்கறிக் கலவையை ஒரு கரண்டி அளவு எடுத்து அடை போல் வார்த்து, சிவந்ததும் திருப்பிப் போட்டு, மேலே ஒரு ஸ்பூன் திரும்பவும் எண்ணெயை விட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.