மகளிர்மணி

வெந்தயக் கீரை அடை

உளுத்தம் பருப்பைத் தனியாக ஊறவைக்கவும். இரண்டு அரிசிகளையும் கடலைப் பருப்பையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

பழுங்கல் அரிசி, பச்சரிசி- தலா 1 கிண்ணம்

உளுத்தம் பருப்பு- 3 மேசைக்கரண்டி

கடலைப் பருப்பு- அரை கிண்ணம்

வெந்தயக் கீரை- 5 கட்டு (சிறியது)

உப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், எண்ணெய்- சிறிதளவு

செய்முறை:

உளுத்தம் பருப்பைத் தனியாக ஊறவைக்கவும். இரண்டு அரிசிகளையும் கடலைப் பருப்பையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். முதலில் உளுத்தம் பருப்பை அரைத்துகொண்டு, பின்னர் அத்துடன் ஊறவைத்துள்ள அரிசி, கடலைப் பருப்பையும் போட்டு, பெருங்காயம், உப்பு, மிளகாயையும் சேர்த்து, நன்றாக அரைக்கவும்.

ஏற்கெனவே அரைத்துள்ள உளுத்தம் பருப்பு மாவுடன் கலந்துகொண்டு, கடைசியாக வெந்தயக் கீரையையும் சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்து எடுக்கவும். தோசைக்கல் சூடானவுடன் சிறிது எண்ணெய்விட்டு அடைகளாக வார்த்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT