முகப்பு
மகளிர்மணி

சம்பா ரவை தோசை

முதலில் சம்பா ரவையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியவுடன் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

Updated On : 30 நவம்பர், 2025 at 12:01 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

சம்பா ரவை- 300 கிராம்

உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி- தேவையான அளவு

Advertisement

இஞ்சி- 1 சிறிய துண்டு

பச்சை மிளகாய்-4

தக்காளி- 3

செய்முறை:

முதலில் சம்பா ரவையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியவுடன் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். அந்த சம்பா ரவையுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரை விட்டு கலந்து கரகரப்பாக அரைக்கவும்.

இத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, சூடானதும் சிறிது எண்ணெய்விட்டு தோசைகளாக வார்த்துத் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.